Monday 14 May 2012

கோபம்!


கோபமும் அழகு தான்
நாம் நேசிப்பவர்கள் மீது வரும்பொழுது...

ஓர் இரவு முழுதும் உன்னிடம்
உரையாட முடியாமல் இருந்த
என் தவிப்பின் வெளிப்பாடு 
கோபம்..

மறுநாள் விடிந்ததும் உன்னிடம்
பேச முயற்சித்து முடியாத போது
என் இயலாமையின் வெளிப்பாடு 
கோபம்..

சில பரிமாற்றங்களுக்குப் பிறகு
மாலையில் உனக்காய் சமைக்கும் போது
நான் பார்க்கவில்லையடா என் கைபேசியை...

நம் தோழி உன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்....
நானும்
எதிர்பார்த்திருந்தேன் உன் ஒற்றை குறுஞ்செய்தியை...
எதிர்பார்த்தது நடக்காததால்
என் ஏமாற்றத்தின் வெளிப்பாடு 
கோபம்...

அன்பின் வெளிப்பாடே கோபம்!
அன்பான கோபத்தின் மிகுதியால்
உன்னைப் பார்க்க பல மாயங்கள் செய்து
வீட்டில் இருந்து கிளம்பினேன்..
அதற்குள் நம் தோழி உனக்கு தெரியிவித்துவிட்டாள்
நானும் வருகிறேன் என...

தெரிந்தும் உன் செய்திப் பரிமாற்றங்கள்
அவளுடன் மட்டும் இருந்ததால் மீண்டும் ஒரு ஏமாற்றம்...
மீண்டும்..
ஏமாற்றத்தின் வெளிப்பாடு...
கோபம்..
கோபம் மட்டுமே...

சில நிமிட தயக்கங்களுக்குப் பின்
உனைச் சந்தித்தேன்...
நொடியில் கரைந்தது! என் கோபம்...
ஆயினும் உன்னிடம் வெளிப்படுத்தும் வரை
குறையாது என் தவிப்பு...
ஒரு வித கோபம்!!! 

No comments:

Post a Comment