Friday 27 July 2012

நீர்த்துளி!



ஏன் என்று தெரியவில்லை
இன்னதென்று புரியவில்லை
ஆழ்மனதில் ஒரு குழப்பம்
என் கண்ணோரத்தில்
சிறு நீர்த்துளி!

Thursday 19 July 2012

காத்திருத்தல்



உன்னைப் பார்த்த பின்பு தான் புரிகிறது...
காத்திருத்தலின்
சுகமும் வலியும் என்னவென்று...
-----------------------------------------------------------------------------------------
காத்திருத்தலில் சுகம்
காதலில் மட்டுமல்ல
நட்பிலும் கூட
சாத்தியம் தான்...


சோகம்



இருளில் கரைகிறேன்...
மழையில் அழுகிறேன்...
வெளிப்படுத்த முடியவில்லை
என்னுள் புதைந்த சோகங்களை...

ஆசைகள்


அடை மழையில் ஒற்றைக் குடையில்

உன் கைகோர்த்து நடந்திட ஆசை!


நீ கண்ணுறங்கும் வேளையில்

கண் இமைக்காமல் உன்னை காண ஆசை!


இன்பத்திலும் துன்பத்திலும்

உன் தோள் சாய ஆசை!


நீ அமுதுண்ணும் வேளையில்

ஆசையாய் ஆ காட்ட ஆசை!


முழு நிலா நாளில் உன் கை கோர்த்து

நட்சத்திரங்கள் எண்ண ஆசை!


துயில் எழுகையில் என் கதிரவனாய்ஒளி தரும்

உன் கண்களைக் காண ஆசை!


நிதம் உறங்கும் முன் என் கண்கள் காணும்

பிம்பம் உனதாக இருக்க ஆசை!


பிள்ளைகள் ஒன்றிரண்டு இருந்தாலும்

முதுமையிலும் உன்னை கொஞ்சிட ஆசை!


நாம் காணப் போகும் வாழ்வினில் சிறு சிறு

ஊடல்களும், ஊடலின் முடிவில்

கூடலும் இருந்திட ஆசை!


ஆசைகள் பல பல...

நிறைவேறும் நாளும்

விரைவினில் வந்திட ஆசையடா!!!